/

ரத யாத்திரைக்கு நிபந்தனையுடன் அனுமதி வழங்க உத்தரவு

ராமர் கோயில் கட்டுமானத்திற்கு நிதி திரட்டும் வகையில் நிபந்தனையுடன் ரத யாத்திரை நடத்த அனுமதி வழங்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

News image
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை (கோப்புப்படம்)
Updated On :27 ஜனவரி 2024, 7:34 pm

DIN

ராமர் கோயில் கட்டுமானத்திற்கு நிதி திரட்டும் வகையில் நிபந்தனையுடன் ரத யாத்திரை நடத்த அனுமதி வழங்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையில் 100 வார்டுகளிலும் ரத யாத்திரை நடத்த அனுமதி வழங்கக்கோரி செல்லகுமார் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஹேமலதா முன்பு விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த அவர், ராமர் கோயில் கட்டுவதற்கு நிதி திரட்டும் வகையில் ரத யாத்திரை நடத்தப்படுகிறது. இதற்கு நிபந்தனையுடன் அனுமதி வழங்க காவல் ஆணையருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.