திருவள்ளுவருக்கு ஆரிய அரிதாரம் பூச முயற்சி நடந்திருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இன்று திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்தியில், சிபிஎஸ்இ 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான புத்தகம் ஒன்றில் அய்யன் திருவள்ளுவருக்கு ஆரிய அரிதாரம் பூச முயற்சி நடந்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஆரிய வித்தைகளை எம் தமிழர் பண்பாட்டில் காட்ட எத்தனித்தால் தமிழகம் ஏற்காது; மானமுள்ள தி.மு.க. பொறுக்காது என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.