திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

நெல்லை: ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73-ஆவது பிறந்த நாளையொட்டி அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு அதிமுகவினர் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

News image
ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை
Updated On :27 ஜனவரி 2024, 7:36 pm

DIN

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73-ஆவது பிறந்த நாளையொட்டி அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு அதிமுகவினர் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் உள்ள எம்ஜிஆர் சிலை அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு திருநெல்வேலி மாவட்டச் செயலர் தச்சை என்.கணேசராஜா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியில் மாநில அமைப்புச் செயலர் வீ.கருப்பசாமி பாண்டியன், முன்னாள் எம்.பி.க்கள் முத்துக்கருப்பன், வசந்தி முருகேசன், மாநில எம்ஜிஆர் மன்ற துணைச் செயலர் கல்லூர் இ.வேலாயும், மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலர் ஜெகநாதன் என்ற கணேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

ஜெயலிலதாவின் பிறந்த நாளை முன்னிட்டு பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் உள்ள பிஷப் சார்ஜென்ட் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளி மாணவர்களுக்கு மாவட்டச் செயலர் தச்சை என்.கணேசராஜா காலை உணவு வழங்கினார். 

இதேபோல் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதன்கிழமை பிறந்த குழந்தைகள் அனைவருக்கும் தலா 1 கிராம் தங்கம் மோதிரம், ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலர் ஜெரால்டு ஏற்பாட்டில் அணிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.