சென்னையில் வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு உருளையின் விலை ஒரே மாதத்தில் ரூ.100 அதிகரித்துள்ளது.
பிப்ரவரியில் மூன்றாவது முறையாக ரூ.25 விலை உயர்வால் வியாழக்கிழமை (பிப்.25) சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.785-இல் இருந்து ரூ.810 ஆக அதிகரித்துள்ளது.
கரோனா தொற்று பரவல் காரணமாக அதிகரித்துள்ள வேலையின்மை, பணவீக்கம் ஆகியவற்றால் ஏற்கெனவே பெரும் நெருக்கடிகளுக்கு ஆளாகியுள்ள மக்களுக்கு, ,தொடர்ந்து பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.