சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

தொகுதிகளைக் குறைத்தே பெற்றுள்ளோம்: அன்புமணி

​வன்னியர்களுக்குத் தனி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதால், அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தொகுதிகளைக் குறைத்தே பெற்றுள்ளதாக பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :27 ஜனவரி 2024, 7:37 pm

DIN


வன்னியர்களுக்குத் தனி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதால், அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தொகுதிகளைக் குறைத்தே பெற்றுள்ளதாக பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக, பாமக இடையிலான தொகுதிப் பங்கீடு சனிக்கிழமை இறுதி செய்யப்பட்டது. அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அன்புமணி பேசியது:

"அதிமுகவுக்கும், பாமகவுக்கும் இடையே தேர்தல் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் சேர்ந்து பாமக போட்டியிடும். எங்கள் கூட்டணி நிச்சயம் மிகப் பெரிய வெற்றி பெறும்.

இந்தத் தேர்தலைப் பொறுத்த வரை எங்களுடைய நோக்கம், கோரிக்கை எல்லாம் வன்னியர்களுக்குத் தனியாக இடஒதுக்கீடு வேண்டும் என்பதே. அரசாங்கம் அதை நிறைவேற்றி உறுதிப்படுத்தியிருக்கிறது. 

அதனால் இந்தத் தேர்தலில் நாங்கள் போட்டியிடுகின்ற சட்டப்பேரவைத் தொகுதிகள் எண்ணிக்கையைக் குறைத்தே பெற்றிருக்கிறோம். ஆனாலும், எங்களது பலம் குறையப்போவதில்லை. நிச்சயம் இந்தத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றி பெற்று மீண்டும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதல்வராவார்" என்றார் அன்புமணி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.