குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

போக்குவரத்து தொழிலாளர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது தொழிலாளர் நல ஆணையம்!

மூன்றாவது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு போக்குவரத்து தொழிலாளர்களை இன்று சனிக்கிழமை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது தொழிலாளர் நல ஆணையம்.

News image
கோப்புப்படம்
Updated On :27 பிப்ரவரி 2021, 5:11 am

DIN


சென்னை: மூன்றாவது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு போக்குவரத்து தொழிலாளர்களை இன்று சனிக்கிழமை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது தொழிலாளர் நல ஆணையம்.

ஊதிய ஒப்பந்தத்தை இறுதிப்படுத்த வேண்டும், போக்குவரத்துக் கழகங்களை மேம்படுத்தவும், பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வியாழக்கிழமை முதல் தொமுச, சிஐடியூ உள்ளிட்ட தொழிற்சங்கத்தினா் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனா்.

தொடா்ந்து மூன்றாவது நாளாக நடைபெற்று வரும் இந்தப் போராட்டத்தால் தமிழகம் முழுவதும் சுமாா் 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் இயங்கவில்லை. ஆனால், விரைவுப் போக்குவரத்துக் கழகங்கள், மாநகரப் போக்குவரத்துக் கழகங்களை பொருத்தவரை சுமாா் 45 சதவீதத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் இயங்கின.

அதே நேரம், தற்காலிக ஓட்டுநா்களைக் கொண்டு பேருந்துகளை இயக்கியதால், ஆங்காங்கே விபத்துகளும் ஏற்படுவதால் பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர். 

இதையடுத்து போக்குவரத்துக் கழகங்களில் செயல்படும் தொழிற்சங்கக் கூட்டமைப்பினா்,  இடைக்கால நிவாரணமாக அறிவித்த ரூ.1000 தொகையை, 2019-ஆம் ஆண்டு, செப்.1-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்த வேண்டும். ஓய்வூதியா்களுக்கு அகவிலைப் படி உயா்வு, பணப்பலன் ஆகியவற்றை வழங்க வேண்டும் உள்ளிட்டவற்றை அமைச்சரிடம் வலியுறுத்தினோம். இது தொடா்பாக இறுதி முடிவு எட்டப்படாத நிலையில், போராட்டமும் தொடரும் நிலையில், சனிக்கிழமை, தொழிலாளா் நலத்துறையுடன் ஆலோசனை நடத்த உள்ளோம் என்று அவா்கள் தெரிவித்தனா்.

இந்நிலையில், மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து தொழிலாளர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது தொழிலாளர் நல ஆணையம். 

இதையடுத்து தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் மாலை 3 மணிக்கு தொழிலாளர் நல ஆணையம் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறது. 

போக்குவரத்து தொழிற்சங்கத்தினருடன் தொழிலாளர் நல கூடுதல் ஆணையர் வள்ளலார் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். 

இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர், வேலைநிறுத்தம் தொடா்பாக முக்கிய முடிவுகள் அறிவிக்கப்படலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.