மாமல்லபுரம் அருள்மிகு தலசயன பெருமாள் கோவில் தெப்ப உற்சவம்

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருள்மிகு  தலசயன பெருமாள் கோவிலில் வியாபாரிகள் தெப்ப உற்சவம் நடைபெற்றது. 
திருவடிசூலம் தேவி கருமாரியம்மன் கோவில் பௌர்ணமி யொட்டி அம்மன் ஊஞ்சல் சேவை அலங்காரத்தில் அருள் பாலிக்கிறார்.
திருவடிசூலம் தேவி கருமாரியம்மன் கோவில் பௌர்ணமி யொட்டி அம்மன் ஊஞ்சல் சேவை அலங்காரத்தில் அருள் பாலிக்கிறார்.
Updated on
1 min read

செங்கல்பட்டு:  செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருள்மிகு  தலசயன பெருமாள் கோவிலில் வியாபாரிகள் தெப்ப உற்சவம் நடைபெற்றது. 

ஆண்டுதோறும் மாசி மாதம் பௌர்ணமியையொட்டி மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோவிலில் இரவு தெப்ப உற்சவம்  நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு மாசி பௌர்ணமி மாசி மகத்தை ஒட்டி பெருமாளுக்கு  சிறப்பு அபிஷேகம் அலங்காரம் சிறப்பு பூஜைகள் மகா தீபாராதனை நடைபெற்றது.

‌மாமல்லபுரம் அருள்மிகு  தலசயன பெருமாள் கோவிலில் வியாபாரிகள் தெப்ப உற்சவம் நடைபெற்றது. தெப்பத்தில் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் கீதோபதேசம் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

ஸ்ரீதேவி பூதேவி உடன் பெருமாள் கோவிலில் இருந்து புறப்பட்டு கடற்கரை சாலையில் உள்ள புண்டரீக புஷ்கரணி திருக்குளத்தில் புஷ்பங்களால் வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் கீதோபதேசம் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்க கப்பல் திருவிழா விமர்சியாக நடைபெற்றது. குளக்கரையை சுற்றி நின்ற பக்தர்கள் சுவாமி வீற்றிருக்கும் தெப்பத்தின் கயிறுகளை இழுத்தும் குளத்தில் தேங்காய்கள் உடைத்தும் கற்பூர ஆரத்தி காட்டியும் சுவாமியை வழிபட்டனர். ஏராளமான பக்தர்கள்  தெப்ப உற்சவ திருவிழாவில் கலந்து கொண்டனர். 

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சங்கர் தெப்ப உற்சவ விழா கமிட்டி தலைவர் மல்லை ஜனார்த்தனம் உள்ளிட்ட கோவில் பணியாளர்கள் பட்டாச்சாரியார்கள் தெப்ப உற்சவ விழா கமிட்டி வியாபார வியாபாரிகள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com