47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கமல் கட்சியில் இணைந்தார் பழ.கருப்பையா

முன்னாள் எம்.எல்.ஏ., பழ.கருப்பையா கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்.

News image
Updated On :27 பிப்ரவரி 2021, 6:24 am

DIN

முன்னாள் எம்.எல்.ஏ., பழ.கருப்பையா கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்.

இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யத்தின் வெற்றி வேட்பாளராக முன்னாள் எம்.எ.ஏ., பழ. கருப்பையா போட்டியிடவுள்ளதாகக் கூறினார்.

கல்லுக்கடை மறியல் உள்ளிட்ட பல்வேறு மக்கள் பிரச்னைகளுக்காக போராடி சிறைக்குச் சென்றவர் பழ.கருப்பையா என்று புகழாரம் சூட்டினார்.

மக்கள் நலனுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த சட்டப் பஞ்சாயத்து இயக்கம் மக்கள் நீதி மய்யத்துடன் இணைந்து இந்த சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கவுள்ளதாகத் தெரிவித்தார்.

மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட ஏராளமானோர் மனு அளித்துள்ளதாகவும், இதற்காக மார்ச் 1-ம் தேதி முதல் நேர்முகத் தேர்வு நடைபெறும் என்றும் கமல்ஹாசன் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.