திருநெல்வேலியில் பிரசாரம் மேற்கொண்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வழியில் இளநீர் விற்பனையாளருடன் உரையாடினார்.
தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, 2-வது நாளாக திருநெல்வேலியில் பிரசாரம் மேற்கொண்டார்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் கல்வியாளர்களுடன் கலந்துரையாடிய பிறகு ஆலங்குலம் சென்றார்.
அப்போது வழியில் இறங்கி தனது உதவியாளர்களுடன் இளநீர் குடித்த ராகுல் காந்தி, இளநீர் வியாபாரியுடன் கலந்துரையாடினார்.