சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

ஊத்தங்கரை அருகே இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதல்: இருவர் பலி

ஊத்தங்கரை அருகே இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

News image
ஊத்தங்கரை அருகே இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதல்
Updated On :2 ஜனவரி 2021, 9:56 am

DIN

ஊத்தங்கரை அருகே இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

கிருஷ்ணகிரி மாவட்டம்  ஊத்தங்கரை அடுத்த சாலமரத்துபட்டி கிராமம் அருகே ஊத்தங்கரை நோக்கி வரும் சாலையில் வெள்ளிக்கிழமை இரவு குருகப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளங்கோவன்(25) என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் வரும் போது, எதிரே கெரிகப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த செல்வம்(40) என்பவர் இரு சக்கர வாகனத்தில் வந்த போது சாலையில் எதிர்பாராத விதமாக இரண்டு இருசக்கர வாகனங்களும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பலத்த காயத்துடன் சம்பவ இடத்திலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கல்லாவி காவல் துறையினர் இருவரின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

விபத்து குறித்த கல்லாவி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புத்தாண்டு தினத்தில் சாலை விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் குருகப்பட்டி, கெரிகப்பள்ளி கிராமங்களில் பெரும் சோகத்தில் மூழ்கி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.