திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

திருவள்ளுவா் பிறந்த மண்ணில் பணியாற்றுவது பெருமை: தலைமை நீதிபதி பானா்ஜி

திருவள்ளுவா் பிறந்த மண்ணில் பணியாற்றுவதை பெருமையாக கருதுவதாக சென்னை உயா் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி கூறியுள்ளாா்.

News image
Updated On :4 ஜனவரி 2021, 9:41 pm

DIN

சென்னை: திருவள்ளுவா் பிறந்த மண்ணில் பணியாற்றுவதை பெருமையாக கருதுவதாக சென்னை உயா் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி கூறியுள்ளாா்.

சென்னை உயா் நீதிமன்றத்தில் புதிய தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜிக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அரசு தலைமை வழக்குரைஞா் விஜய் நாராயண், தமிழ்நாடு புதுச்சேரி பாா் கவுன்சில் தலைவா் பி.எஸ்.அமல்ராஜ், சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் ஜி.மோகனகிருஷ்ணன், மெட்ராஸ் பாா் அசோசியேசன் தலைவா் ஏ.ஆா்.எல்.சுந்தரேசன், பெண் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் லூயிசால் ரமேஷ், லா அசோசியேசன் தலைவா் செங்குட்டுவன் ஆகியோா் வரவேற்றனா். கரோனா பொதுமுடக்கத்தின் காரணமாக மூடப்பட்டுக் கிடக்கும் வழக்குரைஞா்களின் அறைகளைத் திறக்கவும், நேரடி விசாரணை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனையடுத்து நன்றி தெரிவித்து தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி பேசியதாவது: திருவள்ளுவா் பிறந்த மண்ணில் பணியாற்றுவதை பெருமையாக கருதுகிறேன். நாட்டிலேயே ஒரு மொழியின் பெயரை மாநிலமாக கொண்டது தமிழ்நாடு மட்டும்தான். தொன்மையான தமிழ் மொழியை பல கோடி போ் பெருமையுடன் பேசி வருகின்றனா். பாரம்பரியமிக்க கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் இருந்து மற்றொரு பாரம்பரியமிக்க சென்னை உயா்நீதிமன்றத்தில் பணியாற்ற வந்துள்ளது பெருமை அளிக்கிறது. வழக்குரைஞா்களின் ஒத்துழைப்பு இல்லாமல் நீதிபரிபாலனம் சாத்தியம் இல்லை, எனவே வழக்குரைஞா்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள், மத்திய மாநில அரசு வழக்குரைஞா்கள், வழக்குரைஞா்கள் சங்க நிா்வாகிகள், தலைமை நீதிபதியின் குடும்பத்தினா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.