மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

சென்னையில் இடைவெளி விடாமல் பெய்த மழை: முழு விவரம்

சென்னையில் நேற்று நள்ளிரவில் பெய்யத் தொடங்கிய மழை, நாள் முழுவதும் தொடர்ந்து நின்று நிதானமாகப் பெய்தது. இதனால் நகரமே வெள்ளக்காடாக மாறியது.

News image
சென்னையில் இடைவெளி விடாமல் பெய்த மழை: முழு விவரம்
Updated On :6 ஜனவரி 2021, 6:14 am

DIN


சென்னை: சென்னையில் நேற்று நள்ளிரவில் பெய்யத் தொடங்கிய மழை, நாள் முழுவதும் தொடர்ந்து நின்று நிதானமாகப் பெய்தது. இதனால் நகரமே வெள்ளக்காடாக மாறியது.

ஜனவரி மாதத்தில் இப்படி மழை பெய்கிறதே என்று சென்னைவாசிகள் ஆச்சரியப்படும் அளவுக்கு நேற்று இடைவெளி விடாமல் மழை பெய்து கொண்டே இருந்தது.

தொடர்ந்து மழை பெய்ததால், தண்ணீர் தேங்காத சாலைகளில் கூட மழைநீர் சூழ்ந்து கொண்டது. போக்கிடம் இல்லாததால் எங்கு செல்வது என்று தெரியாமல் மழை நீர் சாலைகளில் சிக்கித் தவித்தது.

எவ்வளவு வெயிலையும் தாங்கும் சென்னைவாசிகளால், ஒரு சொட்டு மழை நீர் மண்ணில் விழுந்தால் கூட, நகரத்துக்குள் கால் வைக்க பயப்படும் சூழலே இதுவரை நீடிக்கிறது. ஒன்று சாலைகளில் தேங்கும் தண்ணீரும், காலைவாரக் காத்திருக்கும் குண்டு குழிகளும்.

சரி நேரடியாக விஷயத்துக்கு வரலாம். நேற்று சென்னையில் ஒட்டுமொத்தமாக 1353.60 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இன்று காலை 9 மணியுடன்  நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கிண்டியில் 162.20 மி.மீ. மழையும் மாம்பலத்தில் 149.20 மி.மீ. மழையும் சோளிங்கநல்லூரில் 139 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

இதற்கடுத்து, மைலாப்பூரில் 138 மி.மீ. மழையும் அயனாவரத்தில் 128.20 மி.மீ. மழையும் பெரம்பூரில் 119 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.