டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

விழுப்புரத்தில் மீண்டும் மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் மீண்டும் புதன்கிழமை காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

News image
விழுப்புரத்தில் மீண்டும் மழை
Updated On :6 ஜனவரி 2021, 6:32 am

DIN


விழுப்புரம் மாவட்டத்தில் மீண்டும் புதன்கிழமை காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

விழுப்புரத்தில் காலை 9 மணிக்கு தொடங்கிய மழை தொடர்ச்சியாக ஒரு மணி நேரம் பெய்தது. சிறு இடைவெளியுடன் மீண்டும் பலத்த மழை தொடங்கி பெய்து வருகிறது.

இதேபோல் கண்டமங்கலம், திண்டிவனம், முகையூர், உளுந்தூர்பேட்டை, வளவனூர் பகுதிகளிலும் பலத்த மழையாக பெய்து வருகிறது.

Story image

இதனால் நெடுஞ்சாலைகளில் வாகன போக்குவரத்துகளின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

தொடர் மழையால் நீர்நிலை, வாய்க்கால்களில் மழைநீர் வழிந்தோடியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திடீர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.