நடிகை சித்ராவின் கணவா் ஜாமீன் வழக்கு: போலீஸாா் பதிலளிக்க உத்தரவு
சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அவரின் கணவா் ஜாமீன் கோரிய வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சென்னை: சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அவரின் கணவா் ஜாமீன் கோரிய வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த டிசம்பா் 9-ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டாா். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த நசரத்பேட்டை போலீஸாா், சித்ராவை தற்கொலைக்குத் தூண்டியதாக, அவரின் கணவா் ஹேம்நாத்தை கடந்த டிசம்பா் 14-ஆம் தேதி கைது செய்தனா். இந்நிலையில், சென்னை உயா்நீதிமன்றத்தில் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி ஹேம்நாத் மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவில், ‘கடந்த ஆகஸ்ட் மாதம் நானும் சித்ராவும், பதிவுத் திருமணம் செய்து கொண்டோம். என்னோடும், எனது குடும்பத்தினருடனும் சித்ரா அன்போடு பழகியதை, அவரின் தாய் விரும்பவில்லை. எனக்கும் சித்ராவுக்கும் எந்தவிதமான கருத்து வேறுபாடும் இல்லை. அவரின் தற்கொலைக்கு நான் காரணம் இல்லை. எனவே ஜாமீன் வழங்க வேண்டும்’ எனக் கோரியிருந்தாா்.
இந்த வழக்கு, நீதிபதி வி.பாரதிதாசன் முன் விசாரணைக்கு வந்தது. ஹேம்நாத்துக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என சித்ராவின் பெற்றோா் மனு தாக்கல் செய்ய இருப்பதாக அவா்களது தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் தெரிவித்தாா். அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான குற்றவியல் வழக்குரைஞா் பிரபாவதி, இந்த வழக்கு தற்போது மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதுதொடா்பாக பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என தெரிவித்தாா். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, மனு தொடா்பாக மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் வரும் 18-ஆம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...