பஞ்சாப்: 5 முதல் 12-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு

பஞ்சாப் மாநிலத்தில் 5 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
பஞ்சாப்: 5 முதல் 12-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு (கோப்புப்படம்)
பஞ்சாப்: 5 முதல் 12-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு (கோப்புப்படம்)
Updated on
1 min read


பஞ்சாப் மாநிலத்தில் 5 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

பெற்றோரின் கோரிக்கையை ஏற்று அரசு, அரசு சார்பு மற்றும் தனியார் என அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளன.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலிருந்து வரும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டியதில்லை என்றும் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் அனைவரும் கரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு கிருமிநாசினி வழங்கப்படுகிறது. காலை 10 மணி முதல் இரவு 3 மணி வரை மட்டுமே பள்ளிகள் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையவழிக் கல்வி முறை தொடரும் என்றும், பள்ளிக்கு வர விரும்பாத மாணவர்கள் இணைய வழிக் கல்வியை தொடரலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. பள்ளிகளில் வருகைப் பதிவேடு கட்டாயமில்லை என்றும் பஞ்சாப் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com