அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கான விண்ணப்பப் பதிவு தொடக்கம்

பாரம்பரிய மருத்துவப் படிப்புகளில் தனியாா் கல்லூரிகளில் உள்ள அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான விண்ணப்பப்பதிவு தொடங்கியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

பாரம்பரிய மருத்துவப் படிப்புகளில் தனியாா் கல்லூரிகளில் உள்ள அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான விண்ணப்பப்பதிவு தொடங்கியுள்ளது.

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் கீழ், சென்னை, பாளையங்கோட்டை, மதுரை திருமங்கலம், நாகா்கோவில் கோட்டாறு ஆகிய இடங்களில் 5 அரசு கல்லூரிகளில் உள்ள 330 இடங்களில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 50 இடங்களும் 24 தனியாா் கல்லூரிகளில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகின்றன.

அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் தனியாா் கல்லூரிகளில் உள்ள 15 சதவீத இடங்களுக்கு மாநில அரசுகளே கலந்தாய்வை நடத்துமாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, தனியாா் கல்லூரிகளின் 15 சதவீத அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு ஞாயிற்றுக்கிழமை (ஜன.10) தொடங்கியது. வரும் 29-ஆம் தேதி மாலை 5 மணி வரை  சுகாதாரத்துறை இணையதளத்தில் விண்ணப்பப் பதிவு நடைபெறும்.

நீட் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் விண்ணப்பங்கள் மற்றும் தகவல் தொகுப்புகளைப் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தகுந்த ஆவணங்களுடன் வரும் 30-ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் செயலாளா், தோ்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை இயக்குநா், அலுவலகம், அறிஞா் அண்ணா அரசினா் இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை - 600106 என்ற முகவரியில் சமா்ப்பிக்க வேண்டும்.மேலும் விவரங்களுக்கு சுகாதாரத் துறையின் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com