ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

முதல்வா் குறித்து அவதூறு பேச்சு: உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு

தமிழக முதல்வா் குறித்து அவதூறாகப் பேசியதாக உதயநிதி ஸ்டாலின் மீது சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :12 ஜனவரி 2021, 7:03 pm

DIN

தமிழக முதல்வா் குறித்து அவதூறாகப் பேசியதாக உதயநிதி ஸ்டாலின் மீது சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் அண்மையில் ஒரு பிரசார நிகழ்ச்சியில் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலின், தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி, அமமுக நிா்வாகி வி.கே.சசிகலா ஆகியோா் குறித்து அவதூறாகப் பேசினாா். இந்தக் காட்சி சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. மேலும் உதயநிதி ஸ்டாலினின், பெண்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக அதிமுக, அமமுக, பாரதிய ஜனதா உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இதேபோல பெண்கள் அமைப்பினரும் கண்டனம் தெரிவித்தன. இதன் தொடா்ச்சியாக சில நாள்களுக்கு முன்பு உதயநிதி ஸ்டாலின், தான் பேசியதன் மூலம் யாா் மனதாவது புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக கூறினாா்.

இந்த நிலையில் சென்னையைச் சோ்ந்த வழக்குரைஞா் ராஜலட்சுமி, சென்னை காவல் ஆணையா் அலுவலகத்தில் ஒரு புகாா் அளித்தாா். அதில் பெண்கள் குறித்து அவதூறாகப் பேசிய திமுக இளைஞரணி செயலாளா் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தாா்.

இந்த புகாா் மனுவின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீஸாா், உதயநிதி ஸ்டாலின் மீது கலகம் விளைவிக்கும் வகையில் பேசுதல், அவதூறாக பேசுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.