எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

தஞ்சாவூரில் இளைஞர் அரிவாளால் வெட்டிக்கொலை

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை இளைஞரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

News image
தஞ்சாவூரில் இளைஞர் அரிவாளால் வெட்டிக்கொலை
Updated On :12 ஜனவரி 2021, 4:44 am

DIN

 தஞ்சாவூர்: தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை இளைஞரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் மஜீதியா தெருவைச் சேர்ந்தவர் அப்துல் காதர் மகன் அப்துல் கனி (35).   இவர் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை வந்தார். இவரைப் பின் தொடர்ந்து வந்த கூத்தாநல்லூர் மஜீதியா தெருவைச் சேர்ந்த அக்பர் அலி மகன் அஷ்ரப் அலி (40) அரிவாளால் வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த அப்துல் கனி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

இது தொடர்பாக அஷ்ரப் அலியை மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தினர் கைது செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.