கொட்டும் மழையில் முல்லைப் பெரியாறு அணையில் துணைக்குழுவினர் ஆய்வு

4 மாத காலத்திற்குப் பிறகு முல்லைப்பெரியாறு அணையில் கொட்டும் மழையில் மத்திய கண்காணிப்பு துணைக் குழுவினர் புதன்கிழமை ஆய்வு செய்தனர்.
கொட்டும் மழையில் முல்லைப் பெரியாறு அணையில் துணைக்குழுவினர் ஆய்வு
கொட்டும் மழையில் முல்லைப் பெரியாறு அணையில் துணைக்குழுவினர் ஆய்வு
Updated on
1 min read

கம்பம்: 4 மாத காலத்திற்குப் பிறகு முல்லைப்பெரியாறு அணையில் கொட்டும் மழையில் மத்திய கண்காணிப்பு துணைக் குழுவினர் புதன்கிழமை ஆய்வு செய்தனர்.

மத்திய துணைக்குழுத் தலைவரும், மத்திய நீர் வள ஆதார செயற்பொறியாளருமான சரவணக் குமார் தலைமையில், தமிழக அரசு தரப்பில் அணையின் செயற் பொறியாளர் சாம் இர்வின், உதவிகோட்ட பொறியாளர் குமார், கேரள அரசு தரப்பில் கட்டப்பனை பொதுப்பணித்துறை அலுவலக செயற்பொறியாளர் பினுபேபி, உதவி பொறியாளர் பிரசீத் ஆகியோர் புதன்கிழமை தேக்கடி ஏரிக்கு வந்தனர். அப்போது பலத்த மழை பெய்தது. 

தேக்கடி ஏரியில் இருந்து படகு மூலமாக கொட்டும் மழையில் முல்லை பெரியாறு அணைப் பகுதிக்கு சென்று ஆய்வுகள் நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com