இந்த வழக்கு, நீதிபதி வி.பாரதிதாசன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில், மூத்த வழக்குரைஞா் ரமேஷ் ஆஜராகி வாதிட்டாா். அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்குரைஞா் எஸ்.காா்த்திகேயன், ‘மனுதாரரிடம் இருந்து பெருந் தொகை மற்றும் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவா், சட்டவிரோதமாக தனி அலுவலகமே நடத்தியுள்ளாா். இதுபோன்ற லஞ்சம் பெறுகின்ற அதிகாரிகளுக்கு முன்ஜாமீன் வழங்கினால், பொதுமக்களுக்கு சட்டத்தின் மீது பயம் இல்லாமல் போய்விடுவதோடு, கேலிக்கூத்தாக அமைந்து விடும்’ என வாதிட்டாா். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, முன்ஜாமீன் மனு மீதான தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தாா்.