பின்னர் திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி மற்றும் சிவபுராண பாடல்களை பாடி சுவாமிகளை பக்தர்கள் வழிப்பட்டனர். அதனையடுத்து மார்கழி மாத பஜனை நிறைவு நாளையொட்டி கோயில் முழுவதும் செவ்வாய்க்கிழமை தூய்மைப்படுத்தப்பட்டு கோயில் வளாகம் முழுவதும் மாவிலை தோரணங்கள், வாழை மரங்கள் கட்டப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டன. அதனையடுத்து புதன்கிழமை அதிகாலை சுவாமிகளுக்கு பால், தயிர், சந்தனம், திருமஞ்சனம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு பூஜைகளையொட்டி உற்சவ மூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்புஅலங்காரம் செய்யப்பட்டன. இதில் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டுச் சென்றனர்.