திருவாருர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் பெய்த தொடர் மழையால் வயல்களில் தேங்கிய மழைநீரால் சேதமடைந்துள்ள பயிர்களைக் காப்பாற்றும் முயற்சியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த மாதம் உருவான நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக பெய்த மழையால், மன்னார்குடி பகுதியில் பயிர் செய்யப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான சம்பா மற்றும் தாளடி பயிர்கள் சேதமடைந்து விவசாயிகளுக்கு மிகப்பெரிய பாதிப்பினை ஏற்படுத்திய நிலையில், வளிமணடல் மேலடுக்கு சுழற்சி காரணமாக, கடந்த 10 நாள்களாக பெய்துவந்த தொடர் மழையில் காரணமாக. மன்னார்குடி அடுத்துள்ள மண்ணுக்குமுண்டான், கர்ணாவூர், கிளார்வெளி, நொச்சியூர், ஏரிக்கரை பகுதியில் அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்த பத்தாயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட சம்பா, தாளடி நெல் பயிர்கள் அனைத்தும் மழை நீரில் மூழ்கி அழுகிச் சேதமடைந்தும், பயிர்கள் முளைக்கவும் தொடங்கியுள்ளதால் விவசாயிகளை மேலும் வேதனையடைய செய்துள்ளது.
தற்போது, மழை நின்றுள்ளதால் விவசாயிகள் பயிர்களை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் தண்ணீரில் மூழ்கி சாய்ந்து கிடக்கும் நெல் கதிர்களைக் காப்பாற்றும் நடவடிக்கைகளிலும், வயலிலிருந்து தண்ணீரை வெளியேற்றும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து, கிளார்வெளி ஏ.வீரையன் உள்ளிட்ட விவசாயிகள் கூறியது,
புரெவி, நிவர் புயலால் ஏற்பட்ட மழை பாதிப்புக்குப் பின், மத்தியக்குழு ஆய்வு செய்த பின் அறிவித்திருந்த நிவாரணத்தொகை மிகக் குறைவாகும். இதே போன்று, தனியார் காப்பீடு நிறுவனம் கள ஆய்வு செய்துள்ளனர். அவர்கள் வந்து சென்ற பின்பு தான், இடைவெளி விடாமல் பத்து நாள்களுக்கு மேலாக பலத்த மழை கொட்டி தீர்த்துள்ளது. எனவே,பழைய கணக்கெடுப்பு மூலம் அரசு வழங்கும் நிவாரணம், காப்பீடு நிறுவனம் அறிவிக்கும் இழப்பீடு என்பது சரியான அளவுகோலாக அமையாது.
எனவே,மீண்டும் மத்தியக்குழு வந்து பார்வையிடுவதும், காப்பீட்டு நிறுவனத்தினர் புதிய கணக்கெடுப்பினை எடுக்க வேண்டும் அப்போதுதான் உண்மையான பாதிப்பு கண்டறிய முடியும் என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்தகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!

உண்மையான காங்கிரஸ் தவெகவுடன் நிற்கிறது! | Vijay full speech | TVK

திமுகவின் தோல்வி கோவையில் ஆரம்பித்து சேப்பாக்கம் வரை தொடரும்! அண்ணாமலை

டிப்ளமோ முடித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி: உடனே விண்ணப்பிக்கவும்!
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


