திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

கழுகுமலை கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்

கழுகுமலை அருள்மிகு கழுகாசலமூர்த்தி கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.  

News image
கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் செவ்வாய்க்கிழமை தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்தைத் தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு தீபாராதனை.
Updated On :27 ஜனவரி 2024, 7:19 pm

DIN


கோவில்பட்டி : கழுகுமலை அருள்மிகு கழுகாசலமூர்த்தி கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.  

இதையொட்டி ஞாயிற்றுக்கிழமை இராஜ அநுக்கை, திங்கள்கிழமை தேவ அநுக்கை நடைபெற்றது. தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு கோயில் நடை செவ்வாய்க்கிழமை காலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்றது. பின்னர் காலை 8.15  மணிக்கு கொடியேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

அதையடுத்து 9 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.  இதில், கோயில் செயல் அலுவலர் கார்த்தீஸ்வரன், அதிமுக ஒன்றியச் செயலர் வினோபாஜி, நகரச் செயலர் முத்துராஜ் தன்னார்வலர்கள் மாரியப்பன், முருகன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.  

திருவிழாவையொட்டி தினமும் மண்டகப்படிதாரர்கள் சார்பில் சுவாமி பல்வேறு வாகனத்தில் திருவீதியுலா இரவு 8 மணிக்கு மேல் நடைபெறும். 10-ஆம் திருநாளான இம்மாதம் 28-ஆம் தேதி தேர் திருவிழா காலை 8.30 மணிக்கு மேல் நடைபெறும். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.