மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

இலங்கை கடற்பகுதியில் 4 மீனவர்கள் சடலமாக மீட்பு: கோட்டைப்பட்டினத்தில் மீனவர்கள் போராட்டம்

ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :21 ஜனவரி 2021, 11:03 am

DIN

ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஆரோக்கியசாமி என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில், தங்கச்சிமடத்தைச் சேர்ந்த அந்தோனிராஜ் மகன் மெசியா (30), ராமநாதபுரத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் நாகராஜ் (52), மண்டபம் அகதிகள் முகாமைச் சேர்ந்த நிக்சன்டார்வின் மகன் சாம்சன்டார்வின் (28), ராமநாதபுரம் திருப்புல்லாணியைச் சேர்ந்த செல்வம் மகன் செந்தில்குமார் (32) ஆகியோர் கடந்த ஜன. 18ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

Story image

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் விசைப்படகு இயங்குதளத்திலிருந்து இவர்கள் சென்றனர். புதன்கிழமை இவர்கள் கரை திரும்பியிருக்க வேண்டும். இலங்கைக் கடற்படையினர் இவர்களின் படகைத் தாக்கியதாகத் தகவல் பரவியது. இந்த நிலையில் இலங்கைக் கடற்படையினரும் தங்கள் கடற்பகுதியில் தேடுதல் பணியை மேற்கொண்டனர். இதில் புதன்கிழமை இரவு இரு ஆண்களின் சடலங்கள் மீட்கப்பட்டன. தொடர்ந்து மீட்புப் பணி நடைபெற்றதில், வியாழக்கிழமை முற்பகலில் ஒரு சடலமும் பிற்பகலில் இன்னொரு சடலமும் மீட்கப்பட்டன.

மீட்கப்பட்ட மீனவர் சடலங்கள் இலங்கை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. சட்ட நடவடிக்கைகளுக்குப் பிறகு இந்தச் சடலங்கள் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

Story image

இலங்கைக் கடற்படையினரின் தாக்குதல் நடவடிக்கையைக் கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் மீனவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அறந்தாங்கி சார் ஆட்சியர் ஆனந்த் மோகன் உள்ளிட்டோர் மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து அனைவரும் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர்.

இறந்துபோன 4 மீனவர்களின் குடும்பங்களுக்கும் முதல்வரின் நிவாரண நிதியிலிருந்து இழப்பீட்டு நிதி வழங்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு, மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடிதம் எழுதியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.