பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

வேளச்சேரியில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

'வேளச்சேரியா? வெள்ளச்சேரியா?' எனும் வினாவோடு கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் இன்று காலை வேளச்சேரி காந்தி சாலையில் நடைபெற்றது. 

News image
வேளச்சேரியில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
Updated On :27 ஜனவரி 2024, 7:20 pm

DIN


சென்னை: 'வேளச்சேரியா? வெள்ளச்சேரியா?' எனும் வினாவோடு கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் இன்று காலை வேளச்சேரி காந்தி சாலையில் நடைபெற்றது. 

இது குறித்து திமுக வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவுள்ள வேளச்சேரி ஏரியை சூழ்ந்துள்ள கழிவுகளை அகற்றி, இந்த ஏரியையும் சேத்துப்பட்டு ஏரியையும் அழகுபடுத்தி, படகு போக்குவரத்துடன் கூடிய சுற்றுலாத்தலமாக மாற்றும் பணிகள் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது. சேத்துப்பட்டு ஏரி மட்டுமே பணிகள் முழுமையாக முடிக்கப்பட்ட நிலையில், வேளச்சேரி ஏரிக்கு வரும் கழிவுநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு புதிய பாதைகள் அமைக்கப்பட்டது. அதற்கு பிறகு கடந்த பத்தாண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சியில் எந்த பணியும் நடைபெறாமல் உள்ளது.

2018ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அந்த ஏரியை சீரமைக்க 25 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்தார். இரண்டு ஆண்டுகள் கழிந்தும் ஏரியை சீரமைக்கும் பணிகள் துவங்கப்படவில்லை. அதேபோல் திமுக ஆட்சியில் வீராங்கல் ஓடை சீரமைக்கும் பணிகள் இருபது சதவீதம் நிறைவுற்றது. நூறு கோடிக்கும் மேலான வீராங்கல் ஓடையை ஆழப்படுத்தி, இருபுறமும் கான்கிரீட் தடுப்புகள் கட்டும் திட்டம் கடந்த பத்தாண்டுகளில் ஒரு சில இடங்களில் மட்டுமே துவங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த பருவ மழைகாலத்தில் வேளச்சேரி மிகப்பெரிய வெள்ள பாதிப்புக்குள்ளானது. வாரக்கணக்கில் மழைநீர் தேங்கி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. எனவே, இதை கவனிக்காத அதிமுக அரசை கண்டித்துதான் இந்த கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

Story image

இந்த ஆர்ப்பாட்டத்தில் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் வாகை சந்திரசேகர், எஸ்.அரவிந்த்ரமேஷ், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் க.தனசேகரன், மு.மகேஷ்குமார், மாநில அணிகளின் நிர்வாகிகள் பாலவாக்கம் க.சோமு, வேளச்சேரி பி.மணிமாறன், கவிஞர் காசிமுத்துமாணிக்கம், சி.பிரதீப், பகுதி கழக செயலாளர் துரை.கபிலன், சு.சேகர், எஸ்.வி.ரவிச்சந்திரன், வி.இ.மதியழகன், இரா.துரைராஜ், கே.கண்ணன், மு.ராசா, நொளம்பூர் வே.ராஜன், காரப்பாக்கம் கணபதி, இளைஞர் அணி நிர்வாகிகள் வே.ஆனந்தம், ஏ.எம்.வி.பிரபாகர்ராஜா உள்ளிட்டோருடன் பொதுமக்களும் இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று தம் எதிர்ப்பை பதிவு செய்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.