47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கூலமேட்டில் ஜல்லிக்கட்டு தொடங்கியது

கூலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி சேலம் மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

News image
கூலமேடு ஜல்லிக்கட்டு போட்டி
Updated On :23 ஜனவரி 2021, 7:00 am

DIN


கூலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி சேலம் மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்துள்ள கூலமேட்டில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். ஆனால், தொடா் மழையால் கடந்த 17-ஆம் தேதி நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் காளை உரிமையாளா்கள், மாடுபிடி வீரா்கள், பாா்வையாளா்கள் ஏமாற்றம் அடைந்தனா்.

இந்நிலையில் சனிக்கிழமை ஜல்லிக்கட்டு நடைபெறும் என விழாக் குழுவினா் அறிவித்து அதற்கான பணியில் ஈடுபட்டு வருகின்றனா். அதைத் தொடா்ந்து, காளை உரிமையாளா்கள், மாடுபிடி வீரா்களுக்கு கரோனா பரிசோதனை செய்து காளைகள் முன்பதிவு நடைபெற்று வந்தது.

இந்நிலையில், ஜல்லிக்கட்டு போட்டி சேலம் மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் தலைமையில் நடைபெற்றது.

ஜல்லிக்கட்டை மத்திய கூட்டுறவு வங்கியின் மாநிலத்தலைவர் துவக்கி வைத்தார். ஆத்தூர் கோட்டாட்சியர் மு.துரை, வட்டாட்சியர் அ.அன்புச்செழியன் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள், ஏராளமான பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.

நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் ஆத்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஏ.இம்மானுவேல் ஞானசேகரன் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.