சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

திருப்பூர் மாவட்டத்தில் ராகுல்காந்தி இன்று தேர்தல் பிரசாரம்

திருப்பூர் மாவட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி 2 நாள்கள் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.

News image
ராகுல்காந்தி
Updated On :23 ஜனவரி 2021, 5:19 am

DIN


திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி 2 நாள்கள் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தி தில்லியில் இருந்து தனி விமானத்தில் சனிக்கிழமை கோவை வருகிறார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின்னர் கார் மூலமாக திருப்பூர் மாவட்டம் அவிநாசி புதிய பேருந்து நிலையம் முன்பாக சனிக்கிழமை மாலை 3.30 மணி முதல் 3.45 மணி வரையில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். 

இதைத்தொடர்ந்து, திருப்பூர் அனுப்பர்பாளையத்தில் மாலை 4.10 முதல் 4.40 வரையிலும், ரயில் நிலையம் முன்பாக உள்ள திருப்பூர் குமரன் நினைவுத் தூணுக்கு சனிக்கிழமை மாலை 5 மணிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். 

இதன் பிறகு திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள ராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபத்தில் மாலை 5.45 முதல் 6.45 மணி வரையில் தொழில் முனைவோர் மற்றும் தொழிலாளர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபடுகிறார். இதன் பிறகு பொதுப்பணித்துறை விடுதியில் தங்குகிறார்.

2 ஆவது நாள் தேர்தல் பிரசாரம்: இதைத்தொடர்ந்து, 24 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருப்பூரில் இருந்து கார் மூலமாமக ஈரோடு செல்லும் ராகுல்காந்தி பல்வேறு இடங்களில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். இதன் பிறகு திருப்பூர் மாவட்டம் தாராபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். 

இதன் பின்னர் அங்குள்ள தனியார் விடுதியில் இரவு தங்கும் அவர் திங்கள்கிழமை காலை 10 மணி அளவில் கரூர் மாவட்டம் செல்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.