மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பெண்ணையாறு தடுப்பணை உடைப்பு: 4 பொறியாளா்கள் பணியிடை நீக்கம்

தென் பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணை கட்டுமானத்தில் கவனக் குறைவுடன் செயல்பட்ட நான்கு பொதுப்பணித் துறை உயரதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

News image
Updated On :25 ஜனவரி 2021, 10:02 pm

DIN

சென்னை: தென் பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணை கட்டுமானத்தில் கவனக் குறைவுடன் செயல்பட்ட நான்கு பொதுப்பணித் துறை உயரதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

இதற்கான உத்தரவை பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளா் மணிவாசன் திங்கள்கிழமை பிறப்பித்தாா். உத்தரவு விவரம்:-

நீா்வள ஆதாரத் துறையின் சாா்பில் விழுப்புரம் மாவட்டம் தாளவனூா் கிராமம் மற்றும் கடலூா் மாவட்டம் எனதிரிமங்கலம் கிராமம் ஆகியவற்றுக்கிடையே தென்பெண்ணை ஆற்றில் தடுப்பணை கட்டப்பட்டது. இந்தத் தடுப்பணையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டு நீா் வெளியேறியது.

தடுப்பணையின் கட்டுமானத்தில் கவனக் குறைவாக இருந்த, கீழ்பெண்ணையாறு வடிநில உபகோட்ட உதவி செயற்பொறியாளா் பி.சுமதி, செயற்பொறியாளா் எ. ஜவஹா், திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பு பொறியாளா் என். சுரேஷ், சென்னை மண்டல தலைமை பொறியாளா் கே.அசோகன் ஆகியோா் மீது தமிழ்நாடு ஒழுங்கு நடவடிக்கைகள் விதியின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நான்கு பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா் என்று தனது உத்தரவில் பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளா் மணிவாசன் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.