சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

ஆப்பக்கூடல் அருகே மண் திட்டில்  இருசக்கர வாகனம் மோதியதில் விவசாய தொழிலாளி பலி

பவானியை அடுத்த ஆப்பக்கூடல் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற விவசாய தொழிலாளி மண் திட்டில் மோதி விழுந்ததில் உயிரிழந்தார்.

News image
ஆப்பக்கூடல் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற விவசாய தொழிலாளி மண் திட்டில் மோதி பலி.
Updated On :28 ஜனவரி 2021, 7:39 am

DIN

பவானி: பவானியை அடுத்த ஆப்பக்கூடல் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற விவசாய தொழிலாளி மண் திட்டில் மோதி விழுந்ததில் உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம், அத்தாணி அருகே உள்ள கொண்டையம்பாளையத்தைச் சேர்ந்தவர் சின்னகுட்டி மகன் முருகேசன் (42). விவசாயக் கூலித் தொழிலாளி. கடந்த இரு ஆண்டுகளாக கரட்டூரைச் சேர்ந்த யுவராஜ் என்பவர் தோட்டத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் புதன்கிழமை இரவு வேலை செய்ததற்கான கூலிப் பணத்தை பெற தனது இருசக்கர வாகனத்தில் கரட்டூருக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

கொண்டயம்பாளையம் அருகே வரும்போது சாலையோரத்தில் இருந்த மண் திட்டில் இருசக்கர வாகனம் மோதியதில் நிலைதடுமாறி விழுந்தார். இதில், தலையில் பலத்த காயமடைந்த முருகேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து, ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.