மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மானாமதுரை: வைகை ஆற்றுக்குள் இடிந்துபோன தடுப்பணையை கட்ட விவசாயிகள் வலியுறுத்தல் 

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம் முத்தனேந்தல் வைகையாற்றில் இடிந்துபோன தடுப்பணையை மீண்டும் கட்டித்தர வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

News image
மானாமதுரை அருகே முத்தனேந்தல்- இடைக்காட்டூர் இடையே கட்டப்பட்டு தண்ணீர் வரத்து தாங்காமல் இடிந்துபோன தடுப்பணை.
Updated On :29 ஜனவரி 2021, 9:23 am

DIN

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம் முத்தனேந்தல் வைகையாற்றில்  இடிந்துபோன தடுப்பணையை மீண்டும் கட்டித்தர வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

முத்தனேந்தல்-இடைக்காட்டூர் இடையே வைகை ஆற்றின் குறுக்கே கடந்த 2006 ஆம் ஆண்டு  தமிழக அரசு பொதுப்பணித்துறை மூலம் தடுப்பணை கட்டப்பட்டது. அணை கட்டப்பட்ட சில மாதங்களிலேயே வைகை ஆற்றில் வந்த தண்ணீரின் வரத்து தாங்காமல் தடுப்பணையின் ஒரு பகுதி இடிந்தது. காலப்போக்கில் தடுப்பணையின் மற்ற பகுதிகளும் இடிந்து சாய்ந்தது. 

இந்த தடுப்பணை மூலம் முத்தனேந்தல் இடைக்காட்டூர், மிளகனூர் உள்ளிட்ட பல கிராமங்களுக்கு பாசன வசதி கிடைத்து வந்தன. மேலும் இப்பகுதியில் செயல்படும் குடிநீர் திட்டங்களுக்கு ஆதாரமாகவும் இந்த தடுப்பணை இருந்து வந்தது. தடுப்பணை கட்டி சில மாதங்களிலேயே அணை உடைந்து போனதால் இப்பகுதி மக்கள் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

அதைத்தொடர்ந்து உடைந்துபோன தடுப்பணையை மீண்டும் கட்டித்தர வலியுறுத்தி இப்பகுதி விவசாயிகள் பொதுமக்கள் தமிழக அரசை வலியுறுத்தியும் இதுவரை இக் கோரிக்கை கண்டுகொள்ளப்படவில்லை.
எனவே, இனியாவது தமிழக அரசு நடவடிக்கை எடுத்து இடிந்துபோன முத்தனேந்தல் இடைக்காட்டூர் இடையில்  வைகை ஆற்றக்குள் மீண்டும் தடுப்பணை கட்டி தர வேண்டும் என்று விவசாயிகளும் பொதுமக்களும் வலியுறுத்தியுள்ளனர்.

இது குறித்து இப்பகுதியில் வசிக்கும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த காசிராஜன் கூறியதாவது: மேற்கண்டதடுப்பணை கட்டி சில மாதங்களிலேயே தண்ணீர் வரத்து தாங்காமல் உடைந்து விட்டது. இது குறித்து விசாரணை நடத்தி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இது நடக்கவில்லை. எனவே இப்பகுதியில் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறவும் நிலத்தடி நீராதாரம் உயரவும் மேற்கண்டபகுதியில் புதிதாக தடுப்பணை கட்டவேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.