எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

புதுச்சேரி அருகே 2 மாதங்களுக்குப் பிறகு கூடிய வாரச்சந்தை

புதுச்சேரி அருகே மதகடிப்பட்டு பகுதியில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம்.

News image
புதுச்சேரி அருகே 2 மாதங்களுக்குப் பிறகு கூடிய வாரச்சந்தை
Updated On :6 ஜூலை 2021, 3:51 am

DIN

புதுவை மாநிலம் புதுச்சேரி அருகே மதகடிப்பட்டு பகுதியில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம்.

இங்கு மாட்டுச்சந்தை பிரசித்தி பெற்றதாகும். இந்த வாரச் சந்தைக்கு புதுச்சேரி, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து மாடுகள் விற்பனைக்கு வருவதும், காய்கறி, மளிகை பொருட்கள், பழங்கள் வீடுகளுக்கு தேவையான பொருள்கள், மாடுகளுக்கான அலங்காரப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு விதமான கடைகள் சந்தை பகுதியில் வைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பிரெஞ்சு ஆட்சி காலத்திலிருந்து நீண்ட காலமாக பாரம்பரிய சந்தை நடைபெற்று வருகிறது.

Story image

புதுச்சேரியில் கரோனா தொற்றின் இரண்டாம் அலை தாக்கத்தின் காரணமாக, கடந்த மே மாத தொடக்கத்தில் இந்த மதகடிப்பட்டு வாரச்சந்தை மூடப்பட்டது.  இதனால் சிறு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தனர்.

கரோனா தொற்றின் தாக்கம் குறைந்துள்ளதால், வாரச் சந்தைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொம்யூன் ஆணையர் ஜெயக்குமார் இதற்கான அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். 

Story image

இதனை அடுத்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு இன்று செவ்வாய்க்கிழமை, மதகடிப்பட்டு வாரச்சந்தை தொடங்கப்பட்டுள்ளது. வாரச்சந்தையில் மாடுகள் விற்பனைக்கும், காய்கறி, தானியங்கள், கருவாடு, சமையல் பொருட்கள் விற்பனை கடைகள் குவிக்கப்பட்டுள்ளன. வியாபாரிகளும், பொதுமக்களும் காலை முதலே திரண்டுள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.