புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தமிழகத்துக்கு கூடுதல் தடுப்பூசி வழங்க வலியுறுத்தினேன்: மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்

தில்லயில் மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகளை சந்தித்து தமிழகத்துக்கு கூடுதல் தடுப்பூசி வழங்க வலியுறுத்தியதாக மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :9 ஜூலை 2021, 12:01 pm

DIN

தில்லயில் மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகளை சந்தித்து தமிழகத்துக்கு கூடுதல் தடுப்பூசி வழங்க வலியுறுத்தியதாக மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தில்லியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது, ஜூலை 12க்குள் 15.85 லட்சம் தடுப்பூசி டோஸ் தருவதாக மத்திய அரசு உறுதியளித்துள்ளது. தடுப்பூசி உற்பத்தியில் உள்ள சவால்கள், தரச்சான்றிதழ் ஆகியவற்றால் தாமதம் ஆவதாக மத்திய அரசு தரப்பில் தெரிவித்தனர்.
11 மருத்துவக் கல்லூரிகளுக்கான அனுமதி பெறுவது குறித்தும் மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளேன். மதுரையில் எஸ்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்த உறுதி அளித்துள்ளனர். 
காஷ்மீர் உள்ளிட்ட பல மாநிலங்களில் தற்காலிகமாக எஸ்ம்ஸ் மருத்துவக்கல்லூரி தொடங்கப்பட்டுள்ளதாக கூறினர். ஜூலை 12க்குள் 15.85 லட்சம் தடுப்பூசி டோஸ் தருவதாக மத்திய அரசு உறுதியளித்துள்ளது. கரோனா 3ஆவது அலை முன்னெச்சரிக்கை பணிகள் பற்றியும் மத்திய அரசு விளக்கம் தந்தது என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.