பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

நீட் தேர்வின் தாக்கம்: ஏ.கே.ராஜன் குழு நாளை(ஜூலை 14) அறிக்கை தாக்கல்

நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழு, நாளை தமிழக முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது.

News image
ஆகஸ்டில் நடக்குமா நீட் தேர்வு? என்ன சொல்கிறது தேசிய தேர்வு முகமை
Updated On :13 ஜூலை 2021, 11:38 am

DIN

நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழு, நாளை தமிழக முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது.

தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வின் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 8 பேர் கொண்ட உயர்நிலைக் குழுவை தமிழக அரசு அமைத்திருந்தது.

நீட் தேர்வின் பாதிப்பு குறித்து மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட 89,342 பேர் நீட் தேர்விற்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகளை தெரிவித்திருந்தனர்.  

இந்த கருத்துகளின் அடிப்படையில் பல கட்ட ஆலோசனைகளை நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு நடத்தியது.

இந்நிலையில், ஏ.கே.ராஜன் குழுவினர் தங்களின் அறிக்கையை நாளை காலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்பிக்கவுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.