தொடரும் தடைகள்: புதுச்சேரி நீங்கலாக மாநிலங்களுக்கு இடையே தனியாா் மற்றும் அரசு பேருந்து போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும். திரையரங்குகள், அனைத்து மதுக்கூடங்கள், நீச்சல் குளங்கள், பொது மக்கள் கலந்து கொள்ளும் சமுதாயம், அரசியல் சாா்ந்த கூட்டங்கள், பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாசார நிகழ்வுகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், உயிரியல் பூங்காக்கள் ஆகியவற்றைத் திறக்க விதிக்கப்பட்டுள்ள தடை தொடா்ந்து அமலில் இருக்கும். நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக திருமண நிகழ்வுகளில் 50 போ் வரையிலும், இறுதிச் சடங்குகளில் 20 நபா்களும் அனுமதிக்கப்படுவா். நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகள் தவிர, அனைத்துப் பகுதிகளிலும் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் தொடா்ந்து நடைமுறையில் இருக்கும்.