பேரிடர் கால வழக்குகளை திரும்பப் பெற வணிகர் பேரமைப்பு கோரிக்கை
தமிழக வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் தமிழக அரசுக்கு சில முக்கிய கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளன.


சென்னை: கரோனா பெருந்தொற்று தற்போது குறைந்து வரும் நிலையில், வணிகர்களின் வாழ்வாதாரம் கருதி மேலும் தளர்வுகளை அளிக்க தமிழக வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் தமிழக அரசுக்கு சில முக்கிய கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளன.
அதில், கரோனா பெருந்தொற்று பேரிடரால் மிகவும் பாதிக்கப்பட்ட வணிகர்கள் தற்போது மீண்டெழுந்து வரும் நிலையில் கடைகளுக்கு சீல் வைப்பது, அடிக்கடி அபராதம் விதித்தல் போன்றவை நிறுத்தப்பட வேண்டும்.
பேரிடர் காலத்தில் வணிகர்கள் மீதான வழக்குகள் முழுமையாக திரும்பப் பெற வேண்டும். அதிகபட்சமாக தண்டனைகள், அபராதம், வெகுவாகக் குறைக்கப்பட வேண்டும்.

அனைத்து உணவகங்கள், தேநீர் கடைகள் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதிக்க வேண்டும்.
ஜவுளி, நகைக் கடைகளை இதர வணிக நிறுவனங்களுக்கு இணையாக கால நீட்டிப்பு செய்து, திறப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும்.
நகைக் கடை, நகை அடகுக் கடை, ஜவுளிக் கடை மற்றும் உணவகக் கட்டடங்களுக்கு சொத்து வரி, குடிநீர் வரி, கழிவு நீர் வரி போன்றவற்றை குறைந்தது 6 மாத காலத்துக்கு ரத்து செய்யப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...