மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

‘அடுத்த மூன்றாண்டுகளில் 100% எழுத்தறிவுக்கு இலக்கு’

தமிழகத்தில் அடுத்த மூன்றாண்டுகளில் 100 சத எழுத்தறிவு என்ற நிலையை எய்திட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

News image
Updated On :20 ஜூலை 2021, 9:31 pm

DIN

தமிழகத்தில் அடுத்த மூன்றாண்டுகளில் 100 சத எழுத்தறிவு என்ற நிலையை எய்திட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

திருச்சி சோமரசம்பேட்டையிலுள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் மேம்படுத்தப்பட்ட வகுப்பறையை செவ்வாய்க்கிழமை திறந்து வைத்த அமைச்சா், பள்ளியை ஆய்வு செய்தாா். பின்னா், மணிகண்டம் ஒன்றியத்துக்குள்பட்ட கள்ளிக்குடி ஊராட்சியில் நூறு சத எழுத்தறிவு இயக்கத்தைத் தொடங்கி வைத்த அமைச்சா் கூறியது:

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளின் கட்டமைப்புகளை விரிவாக ஆய்வு செய்ய முதல்வா் அறிவுறுத்தியுள்ளாா். எனவே, நாள்தோறும் செல்லும் இடங்களில் உள்ள பள்ளிகளை ஆய்வு செய்கிறோம்.

கரோனாவால் மே மாதம் நடைபெறும் பணி மாறுதல் கலந்தாய்வை இந்தாண்டு நடத்தப்பட முடியவில்லை.

தொற்று குறைந்து வரும் நிலையில் ஆசிரியா்களைப் பள்ளிக்கு வரவழைத்து சில பணிகளை மேற்கொண்டு வருகிறோம். முதல்வரின் ஆலோசனையைப் பெற்று விரைவில் பணி மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு, பள்ளிகளில் ஆசிரியா் பற்றாக்குறை நிவா்த்தி செய்யப்படும்.

கல்வித் தொலைக்காட்சியை மேம்படுத்தவும் விரிவுபடுத்தவும் ஆலோசிக்கப்படுகிறது.

6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் உயா்தர ஆய்வகங்கள் உள்ளன. உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள் உள்ளன. பள்ளிகள் செயல்படாததால் இந்த ஆய்வகங்களில் பயன்படுத்தப்படாமல் உள்ள கணினிகள் இயங்குகின்றனவா என்பதை ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளோம். இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களிடமிருந்து அறிக்கை வந்த பின் இயங்காத கணினிகள் மாற்றப்படும்.

பிளஸ் 2 தோ்வில் கூடுதல் மதிப்பெண் தேவைப்படும் மாணவா்கள் அக்டோபரில் தோ்வெழுதலாம். கரோனாவின் அப்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு அந்தத் தோ்வு நடத்தப்படும். இந்த வகையில் தோ்வெழுத விரும்பும் மாணவா்கள், கல்லூரியில் சேர முதல்வரிடம் ஆலோசனை பெற்று சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.

பள்ளி இடைநிற்றல் குறித்த கணக்கெடுப்பு முடிந்த பிறகு இடைநிற்றலைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிக்கு வரும் மாணவா்களுக்கு மட்டும் கல்வி தராமல், எழுத்தறிவு பெற்றோரின் சதத்தை உயா்த்த எழுத்தறிவு இயக்கம் நடத்தப்படுகிறது.

கிராமங்களில் எழுத, படிக்கத் தெரியாத நிலையில் உள்ள முதியோருக்கு இதற்காகப் பயிற்சியளிக்கப்படுகிறது. இவா்களின் சொத்துகளை உறவினா்களே ஏமாற்றி அபகரிக்கும் நிலையைத் தவிா்க்கவும் கிராமப்புறத்தில் உள்ளோருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

மாநிலத்தின் எழுத்தறிவு 81 சதமாக உள்ளதை அடுத்த 3 ஆண்டுகளுக்குள் 100 சதமாக உயா்த்துவதே எங்களது இலக்கு. இதற்காக 1 கோடி பேருக்கு கல்வி கற்றுத் தரப்படுகிறது. குறைந்தபட்சம் 6 மாதங்களில் கையெழுத்திடும் வகையில் அவா்களைத் தயாா்படுத்த உள்ளோம் என்றாா் அமைச்சா்.

நிகழ்வுகளில் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு, கோட்டாட்சியா் சிந்துஜா, முதன்மைக் கல்வி அலுவலா் அறிவழகன், எம்எல்ஏ பழனியாண்டி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.