தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

தமிழகத்தில் உள்ள 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

News image
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
Updated On :20 ஜூலை 2021, 7:49 am

DIN

தமிழகத்தில் உள்ள 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக ஜூலை 24ஆம் தேதி வரை கோவை, நீலகிரியில் ஓரிரு இடங்களில் கனமழையும், தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மாவட்டத்தை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடனும், நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும், வடமேற்கு வங்கக் கடலில் வரும் 23ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் தமிழகம், ஆந்திரம், மன்னார் வளைகுடா, தெற்கு வங்க கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே குறிப்பிட்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.