தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

கர்நாடகம் - தமிழகம் பேருந்து போக்குவரத்துக்கு தடை: தாளவாடி அரசுப் பேருந்தில் நிரம்பி வழியும் கூட்டம்

தாளவாடிக்கு போதிய அரசுப் பேருந்து வசதியின்றி மலைவாழ் மக்கள் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். கூடுதல் பேருந்து இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

News image
கர்நாடகம் - தமிழகம் பேருந்து போக்குவரத்துக்கு தடை: தாளவாடி அரசுப் பேருந்தில் நிரம்பி வழியும் கூட்டம்
Updated On :20 ஜூலை 2021, 5:19 am

DIN

தமிழகம் - கர்நாடக இடையே பேருந்து வசதி தடை விதிக்கப்பட்டுள்ளதால் மாநில எல்லையில் உள்ள தாளவாடிக்கு போதிய அரசுப் பேருந்து வசதியின்றி மலைவாழ் மக்கள் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். கூடுதல் பேருந்து இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் கொரானா தொற்று குறைந்து வருவதால் கடந்த 5-ம் தேதி முதல் பொது போக்குவரத்து சேவைக்கு தமிழக அரசு அனுமதியளித்தது. இரு மாநில எல்லையில் உள்ள தாளவாடி மலைக்கிராமத்துக்கு  கர்நாடக  புளிஞ்சூர் சோதனைச்சாவடி வழியாக அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த நிலையில், இரு மாநிலங்களிடையே  பொது போக்குவரத்து தடை காரணமாக   தமிழக அரசுப் பேருந்துகள் தற்போது  மாற்றுப்பாதையான தலமலை வழியாக  இயக்கப்படுகின்றன. 

சாதாரண நாள்களில்  தாளவாடிக்கு 8 அரசுப் பேருந்துகள் பேருந்துகள் இயக்கப்பட்டன. 30 ஆயிரம் மக்கள்தொகை கொண்ட தாளவாடியில்  கல்வி, மருத்துவ சேவை மற்றும் விவசாயப் பொருள் விற்பனை போன்ற அன்றாட பணிகளுக்கு  சத்தியமங்கலம் வந்து செல்ல வேண்டியுள்ளது. 

தற்போது தொற்று காரணமாக 3 அரசுப் பேருந்துகள் மட்டுமே இயக்குவதால் போதுமான பேருந்து போக்குவரத்து வசதியின்றி மக்கள் தவிக்கின்றனர். வனவிலங்குகள் அச்சுறுத்தல் காரணமாக தாளவாடியில் இருந்து தலமலை வழியாக அவசர கால மருத்துவ சிகிச்சைக்கு கூட இரு சக்கர வாகனத்தில் பயணிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. குறைந்தளவு பேருந்துகள் இயக்கப்படுவதால் சமூக இடைவெளி கேள்விக்குறியாவதுடன் தொற்று பரவும் அபாயமும் உள்ளது.

எனவே சத்தியமங்கலத்திலிருந்து தாளவாடிக்கு 3 பேருந்துகளுடன் கூடுதலாக 5 பேருந்துகள்  இயக்கினால் சமூக இடைவெளியுடன் பயணிகள் நெரிச்சலின்றி பயணிக்க இயலும்  என தாளவாடி பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.