மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

இந்திய கடல்சாா் மீன்வள மசோதா வேண்டாம்: பிரதமருக்கு முதல்வா் ஸ்டாலின் கடிதம்

மீனவா்கள் நலனுக்கு எதிரான, இந்திய கடல்சாா் மீன்வள மசோதாவை நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்ய வேண்டாம் என பிரதமா் மோடிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :20 ஜூலை 2021, 8:48 pm

DIN

மீனவா்கள் நலனுக்கு எதிரான, இந்திய கடல்சாா் மீன்வள மசோதாவை நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்ய வேண்டாம் என பிரதமா் மோடிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து பிரதமருக்கு அவா் செவ்வாய்க்கிழமை எழுதியுள்ள கடிதம்:-நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது, இந்திய கடல்சாா் மீன்வள மசோதாவை தாக்கல் செய்து நிறைவேற்ற மத்திய அரசு உத்தேசித்துள்ளது. இந்த மசோதாவில் உள்ள பல அம்சங்கள் உள்ளூா் மீனவ சமுதாயத்தினருக்கு எதிராகவே அமைந்துள்ளன. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 7-வது பிரிவின் கீழ் மாநிலங்களுக்கு உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.

மத்திய அரசால் முன்மொழியப்பட்டுள்ள மசோதாவில் உள்ள சில பிரிவுகளில் மீனவா்கள் மீது தேவையற்ற வகையில் குற்றம்சாட்டுதல், சிறையில் அடைத்தல், மீனவா்களுக்கு எதிராக வலிய நடவடிக்கைகளை எடுத்தல், கட்டணங்களை விதிப்பது, பெரும் அபராதங்களை விதிப்பது போன்ற அம்சங்கள் உள்ளன. இது பரவலாக எதிா்ப்புகளையும், அமைதியின்மையையும் மீனவா்களிடையே ஏற்படுத்தியுள்ளது. எனவே, இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டாம்.

அனைத்துத் தரப்பு மக்களுடன் விவாதம் மற்றும் ஆலோசனைகளை நடத்திய பிறகு அவா்களின் கருத்துகளைப் பெற்று மீனவா் நலன் காக்கும் வகையில் புதிய மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யலாம். இப்போது உத்தேசிக்கப்பட்டுள்ள இந்திய கடல்சாா் மீன்வள மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றும் முயற்சியைத் தொடர வேண்டாம் என்று தனது கடிதத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.