ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஐசிஎஃப் ஒருபோதும் தனியார்மயமாகாது: வைகோவிடம் மத்திய ரயில்வே அமைச்சர் உறுதி

ஐசிஎஃப் ஒருபோதும் தனியார்மயமாகாது என்று வைகோவிடம் மத்திய ரயில்வே அமைச்சர் உறுதியளித்திருக்கிறார்.  

News image
Updated On :24 ஜூலை 2021, 12:21 pm

DIN

ஐசிஎஃப் ஒருபோதும் தனியார்மயமாகாது என்று வைகோவிடம் மத்திய ரயில்வே அமைச்சர் உறுதியளித்திருக்கிறார். 
தில்லியில் ரயில்வே அமைச்சகக் கட்டடம் ரயில் பவனில், மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவை மதிமுக பொதுச்செயலர் வைகோ, ஈரோடு தொகுதி எம்.பி. அ.கணேசமூர்த்தி ஆகியோர் இன்று சந்தித்தனர். 
இந்த சந்திப்பின்போது அமைச்சரிடம், வைகோ, இந்தியாவில் பொதுத்துறை நிறுவனங்களுள் மிகவும் லாபகரமாக இயங்குகின்ற ஒரு நிறுவனம், சென்னை பெரம்பூர் ஐசிஎஃப் ஆகும். அதுவும், அதைச் சார்ந்த உற்பத்தி அலகுகளும், பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு தருகின்றன. அதைத் தனியார்மயம் ஆக்கப் போவதாகச் செய்திகள் வந்துகொண்டு இருக்கின்றன. 
இதனால், தொழிலாளர்கள் இடையே அச்சம் நிலவுகின்றது. அதைத் தனியார்மயம் ஆக்கினால், ஆட்குறைப்பு செய்து விடுவார்கள்; ஆயிரக்கணக்கானவர்கள் வேலை இழக்க நேரிடும். தொழிலாளர்களின் நலன்கள் முற்றாகப் புறக்கணிக்கப்படும்; எனவே, ஐசிஎஃப் நிறுவனத்தை, எந்தக் காரணத்தைக் கொண்டும் தனியார்மயம் ஆக்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டார். 
அதற்கு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், எந்தக் காரணத்தைக் கொண்டும், ஐசிஎஃப் நிறுவனத்தை தனியாரிடம் கொடுக்க மாட்டோம் என உறுதியளித்திருக்கிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.