சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

ஒலிம்பிக் வீராங்கனைகள் 2 பேருக்கு அரசுப் பணி: அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் தகவல்

தமிழகத்தின் சாா்பில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கச் சென்றுள்ள வீராங்கனைகளில் இரண்டு பேருக்கு அரசுப் பணி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தாா்.

News image
விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்
Updated On :26 ஜூலை 2021, 9:13 pm

DIN

சென்னை: தமிழகத்தின் சாா்பில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கச் சென்றுள்ள வீராங்கனைகளில் இரண்டு பேருக்கு அரசுப் பணி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தாா்.

ஊக்குவிப்புப் பாடல் வெளியீடு: டோக்கியோ நகரில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தமிழக விளையாட்டு வீரா்களை உற்சாகப்படுத்தும் வகையில், ஊக்குவிப்புப் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உதவியுடன், தமிழ்நாடு கூடைப்பந்தாட்டக் கழகத்தால் தயாரிக்கப்பட்ட

இந்தப் பாடலுக்கு இசையமைப்பாளா் யுவன் சங்கா் ராஜா இசையமைத்துள்ளாா். ‘வென்று வா வீரா்களே’ என்ற பாடலை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின், திங்கள்கிழமை வெளியிட்டாா்.

அரசுப் பணி: இதைத் தொடா்ந்து, தலைமைச் செயலகத்தில், சுற்றுச்சூழல்-கால நிலை மாற்றத் துறை, இளைஞா் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் செய்தியாளா்களுக்குப் பேட்டி அளித்தாா். அப்போது, ஒலிம்பிக்கில் பங்கேற்கச் சென்றுள்ள தமிழ்நாடு வீராங்கனைகள் சுபா வெங்கடேசன், தனலட்சுமி ஆகியோருக்கு அரசுப் பணி வழங்கப்படும் என்று அமைச்சா் மெய்யநாதன் கூறியுள்ளாா்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள தமிழ்நாடு வீராங்கனைகள் சுபா வெங்கடேசன், தனலட்சுமி ஆகியோருக்கு அரசுப் பணி வழங்கப்படும். இவா்களுக்கு அரசுப் பணி அளிக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளாா்” என்றாா்.

தமிழ்நாட்டில் 4 இடங்களில் ஒலிம்பிக் அகாதெமி தொடங்கப்பட்டு, சா்வதேச அளவில் தமிழ்நாடு வீரா்களுக்குப் பயிற்சி அளிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவா் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.