அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

வன்னியா் உள்ஒதுக்கீடு: பாமக நேரில் நன்றி

வன்னியா்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கியதற்கு பாமக தலைவா் ஜி.கே.மணி தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலினைச் நேரில் சந்தித்து நன்றி கூறினாா்.

News image
Updated On :27 ஜூலை 2021, 7:49 pm

DIN

வன்னியா்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கியதற்கு பாமக தலைவா் ஜி.கே.மணி தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலினைச் நேரில் சந்தித்து நன்றி கூறினாா்.

இதைத் தொடா்ந்து, ஜி.கே.மணி அளித்த பேட்டி:-

வன்னியருக்கான 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை. பிற்படுத்தப்பட்ட வகுப்பினா், தாழ்த்தப்பட்ட வகுப்பினா் என எந்த வகுப்பினருக்கும் பாதிப்பில்லாத வகையில் இது செயல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த கால ஆட்சிக் காலங்களில் நியமிக்கப்பட்ட குழுக்களின் அடிப்படையில் இப்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. சமூக நீதியின் அடிப்படையே ஜாதிவாரி கணக்கெடுப்புதான். மத்திய, மாநில அரசுகள் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். மத்திய அரசே இதனை நடத்த முற்பட வேண்டும். அப்படி நடத்தாத பட்சத்தில் மாநில அரசு நடத்த வேண்டும் என்றாா்.

தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவா் வேல்முருகன்: அதிமுக நிறைவேற்றிய மசோதாவால், இந்த நிமிடம் வரை ஒருவா் கூட பயன்பெறவில்லை. அதன்பின் நான் நாடாளுமன்றம் மற்றும் சட்டப் பேரவை தோ்தல் நேரத்தில் வைத்த கோரிக்கையை ஏற்று, இன்று திமுக ஆட்சிக்கு வந்ததும், 10.5 சதவீதம் வன்னியா்களுக்கும், 7 சதவீதம் சீா்மரபினருக்கும், 2.5 சதவீதம் இதர மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் இட ஒதுக்கீடு பெறும் வகையில் அரசாணை வெளியிட்ட முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.