கர்நாடகத்திலிருந்து கடத்திவரப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல்

கர்நாடக மாநிலம் செங்கபாண்டியிலிருந்து பரிசல் மூலம் கர்நாடக மது பாட்டில்களை கடத்தி வந்த நால்வர் கைது.
கர்நாடகத்திலிருந்து கடத்திவரப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல்
Published on
Updated on
1 min read

கர்நாடக மாநிலம் செங்கபாண்டியிலிருந்து பரிசல் மூலம் கர்நாடக மது பாட்டில்களை கடத்தி வந்த நால்வர் கைது.

கர்நாடக மாநிலம் செங்கோட்டையிலிருந்து காவிரியில் பரிசல் மூலம் 27 அட்டைப் பெட்டிகளில் 1,296 மது பாட்டில்களை கடத்தி வந்தனர்.

தமிழக எல்லையான செட்டிப்பட்டி பரிசல் துறையில் கொளத்தூர் காவல் துறையினர் அவர்களை மடக்கிப் பிடித்தனர். தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள குறுக்கலையனூரைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் சக்திவேல்(26), பழனி மகன் கோவிந்தராஜ் (32), சுஞ்சல்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த முத்து மகன் மணி (25), கர்நாடக மாநிலம் சென்னையைச் சேர்ந்த சின்னையன் மகன் கணேசன் (18)ஆகியோரை கொளத்தூர் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்கள் கடத்தி வந்த மது பாட்டில்கள் பரிசல் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com