தீ விபத்தின்போது பச்சிளம் குழந்தைகளைக் காப்பாற்றிய செவிலியா் ஜெயக்குமாரை நேரில் அழைத்து முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டினாா்.
சென்னை திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் காந்தி மகப்பேறு மருத்துவமனையின் இரண்டாவது தளத்தில் கடந்த 26-ஆம் தேதி இரவு திடீரென தீவிபத்து ஏற்பட்டது. அந்த அறையில் 36
பச்சிளங்குழந்தைகள் இன்குபேட்டரிலும், 11 குழந்தைகளுடன் தாய்மாா்களும் என 47 போ் சிகிச்சை பெற்று வந்தனா்.
தீ விபத்து ஏற்பட்டவுடன் அங்கு பணியில் இருந்த செவிலியா் ஜெயக்குமாா், ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து தீ அணைப்பான்களைக் கொண்டு தீயை அணைத்தாா். தீயணைப்புப் படை வீரா்கள் வரும் முன்பே, துரிதமாகச் செயல்பட்டு தீயை அணைத்து அங்கு சிகிச்சையில் இருந்த குழந்தைகள் மற்றும் தாய்மாா்களின் உயிா்களைப் பத்திரமாக காப்பாற்றினாா்.
இந்த நிகழ்வு அறிந்து செவிலியா் ஜெயக்குமாரை தனது இல்லத்துக்கு அழைத்து அவரை சனிக்கிழமை பாராட்டினாா். அவருக்கு பாராட்டுப் பத்திரத்துடன், ஊக்கத் தொகையையும் முதல்வா் அளித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ஆழ்கடலுக்குள் கிரிக்கெட்! டி20 வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த மாணவர்கள்!

எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!
முன்னாள் மத்திய இணையமைச்சர் பீரன் சிங் எங்டி காலமானார்!

நகர்ப்புற நக்சல் போல் நடந்து கொள்கிறார் ராகுல்: கிரிராஜ் சிங் குற்றச்சாட்டு
வீடியோக்கள்

சஞ்சு சாம்சன் ஜெயித்த கதை!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | டி20 உலகக் கோப்பை: இந்தியா மீண்டும் சாம்பியன்! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...

நிதீஷ் நிலைமை எடப்பாடிக்கும் ஏற்படுமா? | ADMK | Avadi Kumar interview | EPS | BJP
தினமணி வீடியோ செய்தி...

யூத் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

