கரோனா சிகிச்சை: கூடுதல் கட்டணம் வசூலித்தால் உரிமம் ரத்து
கரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.


கரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.
கரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்ததைத் தொடர்ந்து தமிழக அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
தனியார் மருத்துவமனைகளை அரசுக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து சிகிச்சை அளிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதனை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம், முதல்வரின் காப்பீடு திட்டத்தில் சேருவதற்கான வருமான உச்ச வரம்பை இரு மடங்காக அதிகரிக்க உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜராக வழக்கறிஞர், கரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று எச்சரித்தார். இதனையடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...