மியான்மரில் ராணுவத்தின் தாக்குதல்களால் கயா பகுதியில் இருந்து இதுவரை 1 லட்சம் பேர் இடம் பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அவை தெரிவித்துள்ளது.
மியான்மரில் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசை ராணுவம் கடந்த பிப்ரவரி மாதம் ஆட்சியிலிருந்து அகற்றியது. அதுமுதல் அந்நாட்டில் இருந்து அகதிகளாக வெளியேறுபவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது
மியான்மரில் ராணுவ ஆட்சியால் அதிகரித்துள்ள இடம்பெயரும் பிரச்னை குறித்து ஐ.நா. கவலை கொண்டுள்ளது. ராணுவத்தினருக்கும் ஆயுதம் ஏந்திய போராளிகளின் குழுவினருக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலால் அப்பாவி மக்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் அவை, பொதுமக்களுக்கு எதிரான மியான்மர் ராணுவத்தின் அடக்குமுறையினால் கயா மாநிலத்தில் இருந்து இதுவரை 1 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
"வேகமாக மோசமடைந்து வரும் பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான செயல்களால் மக்கள் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டு வருகின்றனர்” என ஐக்கிய நாடுகள் அவை கவலை தெரிவித்துள்ளது.
மியான்மரில் இதுவரை ராணுவத்தாக்குதல்களால் 840 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜே.கே டயர் Q4 நிகர லாபம் 80% உயர்வு!

அதர்வா - கயாது லோஹரின் இதயம் முரளி படத்தின் ரிலீஸ் தேதி!

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

டென்டா வாட்டர் அண்ட் இன்ஃப்ரா சொல்யூஷன்ஸ் லாபம் 33% சரிவு!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



