தமிழகத்தில் 18,023-ஆக குறைந்தது கரோனா பாதிப்பு
ஏறத்தாழ 41 நாள்களுக்குப் பிறகு தமிழகத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 19 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.


ஏறத்தாழ 41 நாள்களுக்குப் பிறகு தமிழகத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 19 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.
அதன்படி, மாநிலம் முழுவதும் 18,023 பேருக்கு செவ்வாய்க்கிழமை தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கரோனா பாதிப்புக்குள்ளாகி 409 போ் உயிரிழந்துள்ளனா்.
இதனிடையே, கரோனா தொற்றிலிருந்து மேலும் 31,045 போ் விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 20 லட்சத்து 28,344-ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் இதுவரை நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27,765-ஆக அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 170112 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...