குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

கீழையூர்: காப்பீட்டுத் தொகையை வழங்க கோரி சிபிஐ ஆர்ப்பாட்டம்

கீழையூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட நான்கு இடங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 2020-2021க்கான காப்பீடுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட 5 கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

News image
Updated On :8 ஜூன் 2021, 1:16 pm IST

கீழையூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட நான்கு இடங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 2020-2021க்கான காப்பீடுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட 5 கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செவ்வாய்கிழமை நடைபெற்றது.

கீழையூர் ஒன்றியம் வாழக்கரை ஊராட்சிக்கு உட்பட்ட மெயின் ரோடு பகுதியில்  நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் ஏ. நாகராஜன் தலைமை வகித்தார்.

இதேபோல கீழையூர் கடைத்தெரு பகுதியில் அக்கட்சியின் ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர் ஏ. ராமலிங்கம் தலைமையிலும், எட்டுக்குடியில் கிளைச் செயலாளர் வீ.எஸ். மாசேத்துங் தலைமையிலும் ,திருப்பூண்டியில் கு அக்கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் வீ. சுப்பிரமணியன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேற்கண்ட இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கீழையூர் ஒன்றிய செயலாளரும் ஒன்றிய கவுன்சிலருமான டி.செல்வம் பங்கேற்று கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினார்.

இந்த ஆர்பாட்டத்தில் 2020-2021ஆம் ஆண்டில் பயிர் இன்சூரன்ஸ் தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும், மத்திய அரசு தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகளை வழங்கிட வேண்டும்,செங்கல்பட்டு தடுப்பூசி நிறுவனத்தை தமிழக அரசு நடத்த அனுமதி வழங்கிட வேண்டும், தமிழகத்திற்கு தரவேண்டிய ஜிஎஸ்டி வரியை  உடனடியாக முழுமையாக வழங்கிட வேண்டும்.விலைவாசி உயர்வுக்கு காரணமான பெட்ரோல், டீசல் விலையை குறைத்திட வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.