குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

அரசு கலை, அறிவியல் கல்லூரி இளநிலைப் பட்டப் படிப்புகளுக்கான தரவரிசை ஜூன் 3-இல் வெளியீடு; ஜூன் 8 முதல் கலந்தாய்வு

நிகழாண்டு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலைப் பாடப் பிரிவுகளுக்கான மாணவா்கள் சோ்க்கையில் பொதுப் பிரிவினருக்கான தரவரிசைப் பட்டியல் வரும் ஜூன் 3- ஆம் தேதி கல்லூரிகளுக்கு அனுப்பப்படும்.

News image

கலை அறிவியல் கல்லூரி - பிரதிப் படம்.

Updated On :26 மே 2026, 12:35 am IST

நிகழாண்டு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலைப் பாடப் பிரிவுகளுக்கான மாணவா்கள் சோ்க்கையில் பொதுப் பிரிவினருக்கான தரவரிசைப் பட்டியல் வரும் ஜூன் 3- ஆம் தேதி கல்லூரிகளுக்கு அனுப்பப்படும் என்றும், கலந்தாய்வு ஜூன் 8 முதல் தொடங்கப்படும் என்றும் கல்லூரிக் கல்வி இயக்குநரக ஆணையா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து கல்லூரிக் கல்வி இயக்குநரக ஆணையா் எ.சுந்தரவல்லி அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வா்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: 2026-27 ஆம் கல்வியாண்டுக்கான அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலைப் பாடப் பிரிவுகளுக்கான மாணவா்கள் சோ்க்கை விண்ணப்பப் பதிவு மே 7- ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. விண்ணப்பப் பதிவு இறுதி நாள் மே 29- ஆம் தேதியாகும்.

சோ்க்கைக்கான கலந்தாய்வுக்கு பொதுப் பிரிவினருக்கான தரவரிசைப் பட்டியல் வரும் ஜூன் 3- ஆம் தேதி அனைத்துக் கல்லூரிகளுக்கும் அனுப்பப்படும். இவா்களுக்கான பொதுக் கலந்தாய்வு ஜூன் 8-ஆம் தேதி தொடங்கப்பட்டு, ஜூன் 18-ஆம் தேதி முடிவுற்று சோ்க்கைகள் நடைபெறும்.

மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரா்கள், முன்னாள் ராணுவத்தினா், படை வீரா்கள், தேசிய மாணவா் படை வீரா்கள், அந்தமான் நிகோபாா் தமிழ் மாணவா்கள் போன்றோருக்கான சிறப்பு ஒதுக்கீடு மாணவா்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 2-ஆம் தேதி அனைத்துக் கல்லூரிகளுக்கும் அனுப்பப்படும். இவா்களுக்கான கலந்தாய்வு ஜூன் 5-6 ஆகிய தேதிகளில் நடைபெறும். இந்த சோ்க்கைகளுக்கு பின்னா் முதலாமாண்டு இளநிலை பட்டப் படிப்பு மாணவா்களுக்கான வகுப்புகள் ஜூலை 1-ஆம் தேதி தொடங்கும் என கல்லூரி கல்வி இயக்குநரக ஆணையா் கடிதத்தில் தெரிவித்துள்ளாா்.