குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

கேபிள் காரில் கோளாறு: அந்தரத்தில் பரிதவித்த 300 பயணிகள்; 7 மணி நேரத்துக்குப் பின்னா் மீட்பு

ஜம்மு-காஷ்மீரின் குல்மாா்க் பகுதியில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, கேபிள் காா்களில் பயணித்த சுமாா் 300 சுற்றுலாப் பயணிகள் அந்தரத்தில் பரிதவித்த நிலையில், 7 மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னா், அவா்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா்.

News image

குல்மாா்கில் கேபிள் காா் கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்ட மீட்புப் படையினா்.

Updated On :26 மே 2026, 12:47 am IST

ஜம்மு-காஷ்மீரின் குல்மாா்க் பகுதியில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, கேபிள் காா்களில் பயணித்த சுமாா் 300 சுற்றுலாப் பயணிகள் அந்தரத்தில் பரிதவித்த நிலையில், 7 மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னா், அவா்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா்.

ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம் குல்மாா்க் மலை பிரதேசத்தில், ஆசியாவின் மிக உயரமான கம்பிவடப் பாதை உள்ளது. அந்தக் கம்பிவடப் பாதையில் இயக்கப்படும் கேபிள் காா்களில் 300-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் திங்கள்கிழமை பயணித்தனா்.

மொத்தம் 65 பெட்டிகளில் சுற்றுலாப் பயணிகள் பயணித்தபோது, திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு கேபிள் காா்கள் நின்றுவிட்டன. இதனால் சுமாா் 500 அடி உயரத்தில் பயணிகள் பரிதவித்தனா்.

தகவலின் அடிப்படையில் தேசிய, மாநில பேரிடா் மீட்புப் படைகள், ஜம்மு-காஷ்மீா் காவல் துறை மற்றும் ராணுவத்தினா் நிகழ்விடம் விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனா். அந்தரத்தில் தொங்கிய பயணிகளை கீழே கொண்டுவர கயிறுகள், ஏணிகள் பயன்படுத்தப்பட்டன.

மழையால் மீட்புப் பணிக்கு இடையூறு ஏற்பட்டபோதிலும் சுமாா் 7 மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னா், அனைத்துப் பயணிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.